/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கர்ப்பிணி போல் நடித்து வசூல் வேட்டை
/
கர்ப்பிணி போல் நடித்து வசூல் வேட்டை
ADDED : மே 09, 2024 04:12 AM
திருப்பூர் : திருப்பூரில், வயிற்றில் துணியை கட்டி கொண்டு, கர்ப்பிணி போல் நடித்து பணம் கேட்டு தொந்தரவு செய்த பெண்களை, பயணிகள் மடக்கி பிடித்தனர்.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவை, உடுமலை, பொள்ளாச்சி, பழநி, அவிநாசி, காங்கயம் என, பல ஊர்களுக்கு அரசு, தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகின்றன. அன்றாடம் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு தேவைகளுக்காக பயணம் செய்ய வருகின்றனர். இதனால், காலை முதல் இரவு வரை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி கொண்டு போதை ஆசாமிகள், வழிப்பறி நபர்கள் சிலர் குற்றசெயல்களில் ஈடுபடுகின்றனர். பயணிகள் முகம் சுழிக்கும் வகையில், போதை ஆசாமிகளின் அட்ராசிட்டி, ஆங்காங்கே இளம்வயதினரின் அத்துமீறல்கள் போன்றவை சமீப காலமாக பஸ் ஸ்டாண்டில் அதிகமாகி விட்டது.
இதன தொடர்ந்து, இளம் வயது பெண்கள், கர்ப்பிணி போல் நடித்து பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் நிகழ்வும் அரங்கேறி உள்ளது.
நேற்று முன்தினம் பஸ் ஸ்டாண்டில், இரு பெண்கள் துணிகளை வயிற்றில் கட்டி கொண்டு, கர்ப்பிணி போல் தயாராகி கொண்டிருந்தனர்.
அவர்களின் ஏமாற்று நடவடிக்கையை அங்கிருந்த பயணிகள் சிலர் கண்காணித்தபடி, மொபைல் போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தனர். ஒரு கட்டத்துக்கு மேல், அவர்கள் வயிற்றில் துணியை சுற்றி கொண்டிருக்கும் போது, கையும் களவுமாக பிடித்து எச்சரிக்கைசெய்து அனுப்பினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
போலீசார் கூறுகையில், 'பஸ்சுக்கு காத்திருக்க கூடிய பயணிகளிடம் இதுபோன்ற மோசடி கும்பல்கள் பணத்தை பறித்து வருகின்றனர். பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,' என்றனர்.