sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அறுவடை துவங்கியதும் விலை வீழ்ச்சி; பூசணி விவசாயிகள் கவலை

/

அறுவடை துவங்கியதும் விலை வீழ்ச்சி; பூசணி விவசாயிகள் கவலை

அறுவடை துவங்கியதும் விலை வீழ்ச்சி; பூசணி விவசாயிகள் கவலை

அறுவடை துவங்கியதும் விலை வீழ்ச்சி; பூசணி விவசாயிகள் கவலை


ADDED : ஆக 29, 2024 10:02 PM

Google News

ADDED : ஆக 29, 2024 10:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : நடப்பு சீசனில், பூசணிக்காய்க்கு போதிய விலை கிடைக்காததால், உடுமலை வட்டார விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

உடுமலை சின்னவீரம்பட்டி, தாந்தோணி, துங்காவி, சின்னப்பன்புதுார், கோட்டமங்கலம் மற்றும் சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு இரு சீசன்களில், பூசணிக்காய்(அரசாணி) சாகுபடி செய்கின்றனர்.

நடப்பு சீசனில், தற்போது அறுவடை துவங்கியுள்ளது. பொங்கல் சீசனில், உள்ளூர் சந்தைகளில், நல்ல விலை கிடைக்கும்.

தற்போது, உள்ளூரில் போதிய தேவை இல்லாததால், வடமாநிலங்களுக்கு விற்பனைக்காக பூசணி கொண்டு செல்லப்படுகிறது. ஏக்கருக்கு 20 டன் வரை மகசூல் கிடைக்கிறது.

விவசாயிகள் கூறியதாவது: பூசணிக்காய் தற்போது கிலோ, 5 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த மாதம் வரை, கிலோவுக்கு, 14 ரூபாய் வரை விலை கிடைத்து வந்தது.

அறுவடை துவக்கத்திலேயே விலை சரிந்துள்ளது. இதனால், சாகுபடிக்கு செலவிட்ட தொகை கிடைப்பதே கேள்விக்குறியாகியுள்ளது.

இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us