ADDED : ஜூலை 12, 2024 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக மக்கள்தொகை தின விழா பெருந்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மக்கள் தொகை தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தி, வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரவேல், டாக்டர் சியாமளா கவுரி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி, சுரேஷ், வினோத் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மக்கள்தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

