/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆக்கிரமிப்பு அகற்றம் எதிர்ப்பால் நிறுத்தம்
/
ஆக்கிரமிப்பு அகற்றம் எதிர்ப்பால் நிறுத்தம்
ADDED : மார் 06, 2025 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நொய்யல், ஜம்மனை உள்ளிட்ட பகுதியில் நீர்வழி ஆக்கிரமிப்பை மாநகராட்சி நிர்வாகம் அகற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏ.பி.டி., ரோடு, ஜம்மனை ஓடையையொட்டி உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நடந்தது.
இதற்கு, அப்பகுதியினர் மாற்று இடம் வழங்காமல் ஆக்கிரமிப்பு அகற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பணியாளர்கள் திரும்பினர்.