sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவக்க ஏற்பாடு

/

மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவக்க ஏற்பாடு

மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவக்க ஏற்பாடு

மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவக்க ஏற்பாடு


ADDED : ஜூன் 05, 2024 01:32 AM

Google News

ADDED : ஜூன் 05, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், வங்கிக்கணக்கு துவங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், அனைத்து மாணவர்களுக்கும் வங்கிக்கணக்கு துவங்குவதற்கு, பள்ளிக்கல்விதுறை வழிமுறைகளை வழங்கியுள்ளது.

மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களில் உதவித்தொகை, ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அவை உரிய நேரத்தில் மாணவர்களுக்கு நேரடியாக சென்றடைவதற்கு வங்கிக்கணக்கு தேவையாக உள்ளது.

இதனால், பள்ளிகளில் நேரடியாக இதை துவங்குவதற்கும், அத்துடன் ஆதார் பதிவுகளை இணைப்பதற்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. மாணவர்களின் வயது அடிப்படையில், இரண்டு பிரிவுகளில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

5 முதல் பத்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வங்கி கணக்குடன் இணை கணக்காக துவங்கப்படுகிறது.பத்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனி கணக்குகள் துவக்கப்படுகிறது.

மாணவர்களுக்கான வங்கிக்கணக்குகள் அந்தந்த பள்ளிகளில் துவங்குவதற்கு முகாம் அமைக்கப்பட உள்ளது. கால அட்டவணை அடிப்படையில் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட பள்ளிகளில் முகாம் நடத்தப்பட உள்ளது.

அந்தந்த பள்ளிகளில், இதற்கான பதிவு முகாம் நடக்கும் நாளை, தலைமையாசிரியர்கள் அறிந்துகொண்டு, அதற்கான ஏற்பாடுகளை தயாராக வைப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், பள்ளிகளில் நடக்கும் இந்த முகாம் குறித்து பெற்றோர் அறிந்துகொள்வதற்கும், மாணவர்களுக்கு கணக்கு துவங்குவதற்கு தேவையான ஆதார் எண் உட்பட ஆவணங்களை தயாராக எடுத்து வருவதற்கும், ஆசிரியர் பயிற்றுனர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர் வாயிலாக, அறிவிக்கப்பட வேண்டும்.

தொடர்ந்து வங்கிக்கணக்கு துவக்கப்பட்ட மாணவர்களின் விபரங்களையும், பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளத்தில் பதிவிட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

பள்ளி துவங்கும் முதல் நாள் அன்றே, முகாமிற்கான திட்டமிடுதல் பணிகளை மேற்கொள்ள வழிமுறைகளும் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us