sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு

/

ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு


ADDED : மார் 29, 2024 10:37 PM

Google News

ADDED : மார் 29, 2024 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலை ராஜேந்திரா ரோட்டில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை நகரில், பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடு, ராஜேந்திரா ரோடு, கல்பனா ரோடு, தளி ரோடு, திருப்பூர் ரோடு போன்ற பிரதான ரோடுகள் உள்ளன. இதில், ராஜேந்திரா ரோட்டில், நகராட்சி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, வணிக நிறுவனங்கள், ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளன.

இந்த ரோட்டில் போக்குவரத்து அதிக அளவில் காணப்படும். மேலும், தள்ளுவண்டிகள், கடைகளின் ஆக்கிரமிப்புகள் நிறைந்திருப்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன.

எனவே, இந்த ரோட்டிலுள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள், போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us