sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பஸ் இன்றி மாணவர் தவிப்பு: நாளை பொதுமக்கள் மறியல்

/

பஸ் இன்றி மாணவர் தவிப்பு: நாளை பொதுமக்கள் மறியல்

பஸ் இன்றி மாணவர் தவிப்பு: நாளை பொதுமக்கள் மறியல்

பஸ் இன்றி மாணவர் தவிப்பு: நாளை பொதுமக்கள் மறியல்


ADDED : ஜூலை 21, 2024 11:49 PM

Google News

ADDED : ஜூலை 21, 2024 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்:திருப்பூர், காவிலிபாளையம் மற்றும் காவிலிபாளையம் புதுார் வழித்தடங்களில் 39 மற்றும் 47 டி ஆகிய இரு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

அப்பகுதியில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிக்காக ரோடு தோண்டப்பட்டது. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நிறைவு பெற்று ரோடும் புதுப்பிக்கப்பட்டது. ஆனாலும் நிறுத்தப்பட்ட பஸ்கள் இயக்கப்படவில்லை. குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இப்பகுதியை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

பஸ் வசதி இல்லாததால், காலை மாலை இரு வேளையும் 20 ரூபாய் கொடுத்து ஷேர் ஆட்டோவில் செல்கின்றனர். பனியன் நிறுவன தொழிலாளர்களும் தவிக்கின்றனர். காவிலிபாளையத்தில் மருத்துவமனையும், காவிலிபாளையம் புதுாரில் தொடக்கப்பள்ளியும் உள்ளது. மக்கள் நடந்தே செல்ல வேண்டியுள்ளது. பஸ்களை இயக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் நாளை(23ம் தேதி) சிறு பூலுவபட்டியில் சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்து உள்ளனர்.

.......






      Dinamalar
      Follow us