/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானாவாரியாக கொண்டைக்கடலை சாகுபடி; தயாராகும் விளைநிலங்கள்
/
மானாவாரியாக கொண்டைக்கடலை சாகுபடி; தயாராகும் விளைநிலங்கள்
மானாவாரியாக கொண்டைக்கடலை சாகுபடி; தயாராகும் விளைநிலங்கள்
மானாவாரியாக கொண்டைக்கடலை சாகுபடி; தயாராகும் விளைநிலங்கள்
ADDED : செப் 04, 2024 11:23 PM

உடுமலை : மானாவாரியாக கொண்டைக்கடலை சாகுபடி செய்ய விளைநிலங்களை விவசாயிகள் தயார் செய்து வருகின்றனர்.
உடுமலை கணபதிபாளையம், வெனசப்பட்டி, ராகல்பாவி, கொங்கல்நகரம், பொட்டையம்பாளையம் சுற்றுப்பகுதிகளில், வடகிழக்கு பருவமழை சீசனில், கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.
பருவமழை, பனிப்பொழிவு என சீதோஷ்ண நிலை சீராக அமைந்தால், ஏக்கருக்கு, நுாறு கிலோ கொண்ட, 7 மூட்டை வரை விளைச்சல் கிடைக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக போதிய விளைச்சல் கிடைக்காமல், மானாவாரியில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
வரும் வடகிழக்கு பருவமழை சீசனில், கொண்டைக்கடலை விதைப்பு செய்ய விளைநிலங்களை உழுது தயார்படுத்தி வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'களிமண் விளைநிலங்களில் பிரத்யேகமாக கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. புழுத்தாக்குதலை கட்டுப்படுத்த குறிப்பிட்ட இடைவெளியில், மருந்து தெளிக்க வேண்டியுள்ளது.
பருவமழை போதியளவு பெய்யாதது, செடியின் வளர்ச்சி தருணத்தில் பனிப்பொழிவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் குறைந்து விடுகிறது. தமிழக அரசு, கொண்டைக்கடலையை நேரடியாக கொள்முதல் செய்தால், நல்ல விலை கிடைக்கும்.
இல்லாவிட்டால் தொடர் நஷ்டத்தை சந்தித்து வருபவர்கள் இச்சாகுபடியை கைவிடும் சூழ்நிலை ஏற்படும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.