/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் குறைகேட்பு 10ம் தேதி நடக்கிறது
/
ரேஷன் குறைகேட்பு 10ம் தேதி நடக்கிறது
ADDED : ஆக 08, 2024 12:08 AM
திருப்பூர்: மாவட்டத்திலுள்ள ஒன்பது தாலுகாக்களிலும், வரும் 10ம் தேதி, ரேஷன் குறை கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
அவிநாசியில் வள்ளிபுரம்; தாராபுரம்- தொப்பம்பட்டி; காங்கயம் வரதப்பாளையம்; மடத்துக்குளம்- நீலாம்பூர்; பல்லடம்- மாதப்பூர்; திருப்பூர் வடக்கு- கணக்கம்பாளையம்; உடுமலை- சின்னகுமாரபாளையம்; ஊத்துக்குளி தாலுகாவில் குன்னத்துார் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும்; திருப்பூர் தெற்கு தாலுகாவில் இடுவாய் ஊராட்சி அலுவலகத்திலும் குறைகேட்பு கூட்டம் நடைபெறும்.
காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும் முகாமில் அனைத்து குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்று, பொது வினியோகம் சார்ந்த மனுக்களை பெறுகின்றனர்.
முகாமில் பொதுமக்கள் பங்கேற்று, மனுக்களை அளிக்கலாம்.