/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாரக்கடைசி சிறப்பு பஸ் எண்ணிக்கை குறைப்பு
/
வாரக்கடைசி சிறப்பு பஸ் எண்ணிக்கை குறைப்பு
ADDED : பிப் 15, 2025 07:12 AM
திருப்பூர்; விரைவில் பொதுத்தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், நடப்பு வாரம் வாராந்திர சிறப்பு பஸ் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக வாராந்திர சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல், குடியரசு தின தொடர் விடுமுறையின் போது, 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தைப்பூசம், தைமுகூர்த்தம், பவுர்ணமி முடிந்து விட்டது. வரும், 16ம் தேதி முகூர்த்தம் தினம் என்றாலும், கூட்டம் குறைவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், பொதுத்தேர்வு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நடந்து வருகிறது. விரைவில் பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வு துவங்க உள்ளது. இதனால், வாராந்திர சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. அதன்படி, கோவில்வழி, புதிய பஸ் ஸ்டாண்ட், மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, பிற மாவட்டங்களுக்கு, 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.