sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பந்தல் காய்கறிகளுக்கு விலை நிர்ணயிக்க கோரிக்கை

/

பந்தல் காய்கறிகளுக்கு விலை நிர்ணயிக்க கோரிக்கை

பந்தல் காய்கறிகளுக்கு விலை நிர்ணயிக்க கோரிக்கை

பந்தல் காய்கறிகளுக்கு விலை நிர்ணயிக்க கோரிக்கை


ADDED : ஆக 17, 2024 12:36 AM

Google News

ADDED : ஆக 17, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;பந்தல் காய்கறி சாகுபடியில், மடத்துக்குளம் வட்டார விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.

மடத்துக்குளம் வட்டாரத்தில், அமராவதி, பி.ஏ.பி., மற்றும் கிணற்று பாசனத்தில் பல்வேறு சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, கிணற்று சாகுபடி விவசாயிகள், பந்தல் காய்கறிக்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விளைநிலங்களில், பந்தல் அமைத்து, பீர்க்கன், புடலை, பாகற்காய் சாகுபடி செய்கின்றனர். தற்போது மெட்ராத்தி சுற்றுப்பகுதிகளில், பரவலாக பீர்க்கன் சாகுபடி செய்து, அறுவடை துவங்கியுள்ளது.

விவசாயிகள் கூறுகையில், 'பந்தல் காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்வது அவசியமாகியுள்ளது. கடந்த மாதத்தில், பீர்க்கன், கிலோ 40 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது, எவ்வித காரணமும் இல்லாமல், விலை கிலோவுக்கு, 10 ரூபாய் வரை குறைந்துள்ளது.

அறுவடையின் போது, திடீர் விலை சரிவால் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, தோட்டக்கலைத்துறை வாயிலாக விவசாயிகள் கூட்டமைப்பு ஏற்படுத்தி, அறுவடை சீசனில், விலை நிர்ணயித்தால், பயனுள்ளதாக இருக்கும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us