/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை
/
கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை
ADDED : மே 23, 2024 02:11 AM
உடுமலை: உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில், உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. தற்போது, கோவை - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இந்த ரயில்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். மேலும் டிக்கெட் முன்பதிவு செய்யவும், டிக்கெட் எடுக்கவும் ஏராளமானோர் இங்கு வருகின்றனர்.
பயணியரின் பாதுகாப்பு கருதியும், சமூக விரோத செயல்களை தடுக்கவும், ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

