sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஓய்வு பெற்ற அரசு பஸ் நடத்துனர் கவுரவிப்பு

/

ஓய்வு பெற்ற அரசு பஸ் நடத்துனர் கவுரவிப்பு

ஓய்வு பெற்ற அரசு பஸ் நடத்துனர் கவுரவிப்பு

ஓய்வு பெற்ற அரசு பஸ் நடத்துனர் கவுரவிப்பு


ADDED : ஜூலை 21, 2024 12:31 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:அரசு பஸ்சில், 24 ஆண்டு பணியாற்றி ஓய்வு பெற்ற நடத்துனரை, ஊர் மக்கள் மாலை அணிவித்து கவுர வித்தனர். ஊத்துக்குளியில் இருந்து சென்னிமலை வழியாக பெருந்துறைக்கு சி-13 டவுன் பஸ் இயக்கப்படுகிறது.

இந்த பஸ் நடத்துனர் தவசியப்பன். கடந்த, 2001 முதல் இவ்வழித்தடத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். நேற்றுடன் பணி ஓய்வு பெற்ற இவருக்கு, அக்கரையாம் பாளையம் பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், பயணிகள் இணைந்து பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தினர்.

நேற்று வழக்கம் போல் பணிக்கு வந்த நடத்துனருக்கு, அக்கரையாம் பாளையம் பஸ் ஸ்டாப்பில் ஆரத்தி எடுத்து வரவேற்று, மாலை அணிவித்து, பழங்கள் மற்றும் இனிப்பு வழங்கினர்; சக பயணிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

சிறப்பாக பணியாற்றிய தவசியப்பனுக்கு, அங்கிருந்து அனைவரும் கைதட்டி வழியனுப்பி வைத்தனர். ஊர்மக்களின் இந்நிகச்சியால், அரசு பஸ் டிரைவர், நடத்துனர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us