/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓய்வு பெற்ற அலுவலர் சங்க பேரவை கூட்டம்
/
ஓய்வு பெற்ற அலுவலர் சங்க பேரவை கூட்டம்
ADDED : ஜூன் 11, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலையில் நடந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம் நடந்தது. இதில்
ஓய்வூதியர்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் உடுமலை வட்ட பேரவை கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்கத்தின் தலைவர் சேசாச்சலம் தலைமை வகித்தார். செயலாளர் சாமிநாதன் ஆண்டறிக்கை வாசித்தார்.
பொருளாளர் ராமமூர்த்தி ஆண்டு வரவு-செலவு கணக்கை சமர்ப்பித்தார். ஓய்வூதியர்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணை தலைவர்கள் ரகோத்தமன், காளியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.