/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலா ஆர்த்தோ மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம்
/
பாலா ஆர்த்தோ மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம்
பாலா ஆர்த்தோ மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம்
பாலா ஆர்த்தோ மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம்
ADDED : ஜூலை 01, 2024 01:45 AM
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள, பாலா ஆர்த்தோ மருத்துவமனையில், அதி நவீன 'ரோபோடிக் மூட்டு மாற்று' அறுவை சிகிச்சை மையத்தின் திறப்பு விழா இன்று நடக்கிறது.
திருப்பூரில் முதன் முறையாக ஏ.ஐ., தொழில் நுட்ப வசதியுடன் ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மையம், தாராபுரம் ரோடு, பாலா ஆர்த்தோ மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் நிர்வாக இயக்குனர் டாக்டர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:
மூட்டு மாற்று மற்றும் நுண்துளை சிகிச்சை வழங்கி வரும் இம்மருத்துவமனையில், முதன் முறையாக, ஏஐ வசதியுடன் ரோபோடிக் மூட்டு மாற்றுக்கான அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு ரோபோடிக் முறையில் மிகத்துல்லியமான, வலி இல்லாத வகையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். நீண்ட நாள் பயன்பெறும் வகையில் மூட்டு மாற்று சிகிச்சை உயர்தரத்தில் வழங்கப்படும்.மேலும், ஸ்ட்ரைக்கர் பிளைட் கூடு மூலம் கிருமி மற்றும் நுண்ணுயிர் தொற்று ஏற்படாத வகையில், பிளாஸ்மா தொழில் நுட்பம் வாயிலாக நோய் தொற்று ஏற்படாமல் மூட்டு மாற்று சிகிச்சை வழங்கப்படும்.
இந்த அறுவை சிகிச்சை மையம் திருப்பூர் மக்களுக்கு தனது சேவையைத் துவங்கும் வகையில் திறப்பு விழா இன்று காலை 10:00 மணிக்கு நடைபெறுகிறது.
இவ்விழாவில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி,எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், மண்டல தலைவர் பத்மநாபன், டாக்டர் முருகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளை துவக்கி வைக்கவுள்ளனர்.
இம்மருத்துவமனை 16 ஆண்டு மருத்துவ சேவையை, நீண்ட கால அனுபவம் கொண்ட மருத்துவர் குழு மூலம் வழங்கி வருகிறது. எலும்பு தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உலக தரத்தில், அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் அறுவை சிகிச்சை மையம் துவக்கத்தை முன்னிட்டு, அக்., 31 வரை 50 சதவீத சலுகையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.மேலும் விவரங்களுக்கு 90838 38484, 90868 69696 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.