/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகரில் நெரிசலை குறைக்க 'ரவுண்டானா' ; கிடப்பில் போடப்பட்ட திட்டம்
/
நகரில் நெரிசலை குறைக்க 'ரவுண்டானா' ; கிடப்பில் போடப்பட்ட திட்டம்
நகரில் நெரிசலை குறைக்க 'ரவுண்டானா' ; கிடப்பில் போடப்பட்ட திட்டம்
நகரில் நெரிசலை குறைக்க 'ரவுண்டானா' ; கிடப்பில் போடப்பட்ட திட்டம்
ADDED : ஜூலை 25, 2024 10:37 PM
உடுமலை : பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்க, 'ரவுண்டானா' அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
உடுமலை நகரில், போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்னையாக மாறி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில், அமைந்துள்ள நகரத்தில், ரோட்டோரத்தில், தற்காலிக, நிரந்தர ஆக்கிரமிப்புகளால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.
முக்கிய ரோடுகளின் இருபுறங்களிலும் அமைந்துள்ள கடைகளுக்கு, போதியளவு 'பார்க்கிங்' வசதி இல்லை. எனவே, தேசிய நெடுஞ்சாலை மற்றும் இதர ரோடுகள் குறிப்பிட்ட அளவு, இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக, மாற்றப்படுகிறது.
இதனால், ஏற்படும் நெரிசல், நகரப்பகுதியில், தொடர்கதையாக உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில், பஸ் ஸ்டாண்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரை, வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை காணப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன், நகர எல்லையில் அமைந்துள்ள, கொல்லம்பட்டரை பகுதியிலிருந்து கொழுமம் ரோடு சந்திப்பு வரை, தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்தப்பட்டு, சென்டர்மீடியனும் கட்டப்பட்டது.
மீண்டும் தற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டு வருகிறது. நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது, நகரிலுள்ள ரோடு சந்திப்பு பகுதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டது.
குறிப்பாக, திருப்பூர், தாராபுரம் ரோடு சந்திப்பிலும், பஸ் ஸ்டாண்ட் அருகிலும், ரவுண்டானா அமைப்பதற்கான திட்ட வரைவு அனைத்து துறை ஆலோசனைகள் பெறப்பட்டு, தயாரிக்கப்பட்டது.
இதில், பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா செயல்பாட்டில் உள்ளது. ஆனால், பழைய பஸ் ஸ்டாண்ட் காமராஜர் சிலை சந்திப்பில், ரவுண்டானா, அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
நகர நுழைவாயிலாக அமைந்துள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினரை ஒருங்கிணைத்து, 'ரவுண்டனா' அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இந்த சந்திப்பில், நெரிசல் குறைக்கப்பட்டால், பஸ் ஸ்டாண்ட் வரை வாகனங்கள் அணி வகுத்து நின்று, நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும்; விபத்துகளும் குறையும்.
இத்திட்டம் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது, அனைத்து தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

