/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊரக வளர்ச்சி ஆபீசில் ரூ.1.02 லட்சம் பறிமுதல்
/
ஊரக வளர்ச்சி ஆபீசில் ரூ.1.02 லட்சம் பறிமுதல்
ADDED : ஆக 08, 2024 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர், கோர்ட் வீதியில் ஊரக வளர்ச்சி துறை முகமை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு, ஊராட்சிகளில் நடந்து முடிந்த வளர்ச்சி பணிகளுக்கு 'பில்'களை அனுமதிக்க, ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்றிரவு, 7:00 மணிக்கு, அந்த அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
உதவி செயற்பொறியாளர் தர்மலிங்கத்திடம் இருந்து, 86,000 ரூபாய், உதவி பொறியாளர் சிவராஜிடம் இருந்து, 16,300 ரூபாய், கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.