ADDED : செப் 10, 2024 02:16 AM
உடுமலை:உடுமலை வழியாக சென்னை, தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உடுமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொழில் நிறுவனங்கள், கம்பெனிகள், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், வட மாநிலத்தினரும் அதிகமாக பணி புரிகின்றனர். அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில்களையே பயன்படுத்துகின்றனர்.
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து, தினமும் பலரும் சென்னை உட்பட பல்வேறு நகரங்களுக்கு ரயில்களில் பயணம் செய்கின்றனர்.
ஆனால், தற்போது இயக்கப்படும் ரயில்கள், இவர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால், ரயில்களில் அமர இடமின்றியும், நீண்ட நேரம் நின்று கொண்டும் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே, உடுமலை வழியாக தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, உடுமலை ரயில் பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

