sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கால்வாய் கட்டும் பணிக்கு 'பலியான' மரங்கள்! அதிகாரிகள் வழக்கம்போல 'சப்பைக்கட்டு'

/

கால்வாய் கட்டும் பணிக்கு 'பலியான' மரங்கள்! அதிகாரிகள் வழக்கம்போல 'சப்பைக்கட்டு'

கால்வாய் கட்டும் பணிக்கு 'பலியான' மரங்கள்! அதிகாரிகள் வழக்கம்போல 'சப்பைக்கட்டு'

கால்வாய் கட்டும் பணிக்கு 'பலியான' மரங்கள்! அதிகாரிகள் வழக்கம்போல 'சப்பைக்கட்டு'


ADDED : ஜூலை 18, 2024 12:07 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 12:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : சாக்கடை கால்வாய் பணிக்காக, 25 ஆண்டுகள் வயதுள்ள மரங்களை அடியோடு வெட்டி, வீழ்த்தியதால், குமரானந்தபுரம் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பல்வேறு பசுமை அமைப்புகள், மரம் வளர்ப்பை ஊக்குவித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றன. அப்படியிருந்தும், ரோட்டோரமாக வளர்ந்த மரங்களை, வேருடன் வெட்டி வீழ்த்தும் அட்டூழியம் ஆங்காங்கே நடந்துவிடுகிறது. தனிநபர்களின் சுய லாப, நஷ்டத்துக்காக மரங்களை வெட்டி வீழ்த்துகின்றனர்.

மின்வாரிய பணியாளர்கள், மின்தடை நாளில், மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகளை அப்புறப்படுத்துகின்றனர். அப்போது, சிலரது துாண்டுதலால், மரக்கிளைகள் முழுமையாக வெட்டி, மொட்டை யாக்கி விடுகின்றனர். இப்படி, மரங்களை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பசுமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சி குமரானந்தபுரம் பகுதியில், சக்தி தியேட்டர் ரோட்டில் உள்ள, 25 ஆண்டுகளான நாவல் மரம் மற்றும் அத்திப்பழ மரங்களை, மர்ம நபர்கள் நேற்று வெட்டியுள்ளனர். மரங்களை அடியோடு வெட்டி, விறகு வியாபாரிகளுக்கு விற்பது போல், துண்டு துண்டாக மாற்றி, அடுக்கி வைத்துள்ளதை பார்த்து, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பசுமை ஆர்வலர்கள், மரம் வெட்டுவது குறித்து கேள்வி எழுப்பினர். ஏற்கனவே, சாக்கடை கால்வாய் இருக்கும் நிலையில், புதிதாக கால்வாய் அமைக்கும் பணி துவங்க இருக்கிறது; அதற்காகவே, மரத்தை வெட்டுவதாக, அங்கிருந்த பணியாளர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மரம் வெட்டுவதற்கு எவ்வித அனுமதியும் பெறவில்லை.

சாக்கடை கால்வாயில், பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்; அவற்றை அகற்ற முயற்சிக்காமல், கால்வாய் புதுப்பிக்க 25 ஆண்டுகள் வளர்ந்த மரத்தை வெட்டியது விதிமீறல் என, பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து மாநக ராட்சி கமிஷனர் பவன்குமாரிடம் கேட்டபோது, ''நன்கு வளர்ந்த மரங்களை வெட்டியது குறித்து உடனடியாக விசாரிக்கப்படும். புதிய கால்வாய் கட்டும் பணி துவங்க இருந்தாலும், மரங்கள் வெட்டியது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

சாக்கடை கால்வாயில், பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்; அவற்றை அகற்ற முயற்சிக்காமல், கால்வாய் புதுப்பிக்க 25 ஆண்டுகள் வளர்ந்த மரத்தை வெட்டியது விதிமீறல்






      Dinamalar
      Follow us