sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கல்விப்பணியின் புனிதம்; ஆசிரியர்களுக்கு கவுரவம்!

/

கல்விப்பணியின் புனிதம்; ஆசிரியர்களுக்கு கவுரவம்!

கல்விப்பணியின் புனிதம்; ஆசிரியர்களுக்கு கவுரவம்!

கல்விப்பணியின் புனிதம்; ஆசிரியர்களுக்கு கவுரவம்!


ADDED : செப் 03, 2024 11:55 PM

Google News

ADDED : செப் 03, 2024 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் திருக்குறள் பேரவை சார்பில், சேவை மனப்பான்மையுடன் ஈடுபடும் ஆசிரியர்களில், நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு, 'லட்சிய ஆசிரியர்' விருது வழங்கப்பட்டது.

திருப்பூர், ராயபுரம் ரோட்டரி மெட்ரிக்., பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, திருக்குறள் பேரவை தலைவர் அரங்கசாமி, தலைமை வகித்தார். செயலாளர் வனஜா வரவேற்றார்.

நஞ்சப்பா பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் துரைசாமி, பழனியம்மாள் பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் ஏ.துரைசாமி, 'நிட்மா' தலைவர் அகில் ரத்தினசாமி, பேரவை துணை தலைவர் கலாதரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர்.

கருப்பகவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் வாஞ்சிநாதன், ரோட்டரி மெட்ரிக்., பள்ளி முதல்வர் தீபா வினித்ரா, கூலிபாளையம் அரசுப்பள்ளி தலைமையாசிரியர் மஞ்சுளா, திருப்பூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியை திருவருட்செல்வி ஆகியோருக்கு, லட்சிய ஆசிரியர் விருது, கேடயம், பாராட்டு சான்றிதழ், திருவள்ளுவர் சிலை, நினைவு பரிசு மற்றும் புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், தங்கவேல் (தமிழ்நாடு தமிழ்ச்சங்கம்), தங்கராஜ் (தாய் தமிழ்ப்பள்ளி), மோகன்ராஜ் (வண்ணத்தமிழ் வகுப்பறை) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை, ஜெயக்குமார் தொகுத்து வழங்கினார். பேரவை துணை செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us