sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சந்தன வாசம்... இயற்கையின் நேசம்

/

சந்தன வாசம்... இயற்கையின் நேசம்

சந்தன வாசம்... இயற்கையின் நேசம்

சந்தன வாசம்... இயற்கையின் நேசம்


ADDED : ஜூன் 26, 2024 10:39 PM

Google News

ADDED : ஜூன் 26, 2024 10:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், தாராபுரம் அடுத்த பெரமியம் பகுதியில், 500 சந்தன மரக்கன்றுகள் நடப்பட்டன.

தென்மேற்கு பருவமழை கருணை காட்டிய தால், 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டம் முன்கூட்டியே துவங்கியது. நாற்றங்கால் அமைத்து, நாற்றுகள் தயாராக இருந்தன; விவசாய நிலங்களில், மரம் வளர்க்க முன்பதிவு செய்து விவசாயிகளும் தயாராக இருந்தனர்.

பதிவு செய்திருந்த விவசாய தரிசு நிலங்களில், சொட்டுநீர் பாசனம் அமைத்து, மரக்கன்று நட்டு வைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. மாவட்டத்தில், உடுமலை, தாராபுரம், திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், போட்டி போட்டுக்கொண்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

தாராபுரம், பெரமியம் அடுத்துள்ள, குழந்தையகவுண்டர் வலசு பகுதியில், கார்த்திகேயன், மதிவாணன் ஆகியோருக்கு சொந்தமான கூட்டுக்காட்டு தோட்டத்தில் நேற்று சந்தனம் -500, செம்மரம் -15 என, 515 மரக்கன்று கள் நடப்பட்டன.

'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், இலவசமாக மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்பும் பசுமை ஆர்வலர்கள், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, திட்டக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us