ADDED : ஜூலை 06, 2024 01:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்;பல்லடம், கே.அய்யம்பாளையத்தில் உள்ள தனியார் பேக்கரி ஒன்றில், குழந்தையுடன் வந்த காரணம்பேட்டையைச் சேர்ந்த தம்பதியர் கேக் வாங்கினர்.
குழந்தைக்கு கேக் ஊட்ட முயன்றபோது, கெட்டுப்போனது தெரிந்தது. தம்பதியர் உஷாரானதன் காரணமாக, குழந்தை பாதிப்பில் இருந்து தப்பியது. இது குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பேக்கரியில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை வட்டார அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கெட்டுப்போன கேக்குகளை ஆய்வு செய்தார்.
அவர் கூறுகையில், 'கெட்டுப்போன கேக் விற்பனை செய்ததற்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது,' என்றார்.