/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜனநாயக கடமையை தவறவிடாத மூத்த குடிமக்கள்
/
ஜனநாயக கடமையை தவறவிடாத மூத்த குடிமக்கள்
ADDED : ஏப் 20, 2024 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாச்சியம்மாள், 85,
புதுத்தோட்டம்:
ஓட்டு போடற அன்னைக்கு லீவு விட்டுருவாங்க. பேரன் காலையிலே கூட்டிட்டு வந்துருவான். உள்ளே போனவுடன் பட்டன் அழுத்துங்க. சத்தம் வந்தா வெளியே வாங்கன்னு சொன்னாங்க. அழுத்திட்டு வந்துட்டேன். இதுவரைக்கும், ஒரு பத்து, முப்பது ஓட்டாவது நான் போட்டுருப்பேன்.
வள்ளியாத்தாள், 87, நாதம்பாளையம்:
ஓட்டு போட்டுட்டு வர்றவீங்களுக்கெல்லாம் என்னமோ கொடுக்கறன்னு பேசிக்கிறாங்க. போன வருஷம், பொழுதோட தான் வந்தேன். இந்த வருஷம் வெயில் கடுசு. அதான் காலைலயே வந்துட்டேன்; எப்படியோ, ஓட்டும் போட்டுட்டேன்.

