sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; ஆசாமிக்கு 20 ஆண்டு சிறை

/

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; ஆசாமிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; ஆசாமிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; ஆசாமிக்கு 20 ஆண்டு சிறை


ADDED : ஜூன் 13, 2024 07:29 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: காங்கயத்தில், 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசாமிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பளித்தது.

ஊத்துக்குளியை சேர்ந்தவர், 14 வயது சிறுமி. இவரது தாய், இரண்டாவதாக, 40 வயது மதிக்கத்தக்க நபரை திருமணம் செய்தார். அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த ஆண்டு மார்ச், 15ம் தேதி தனியாக இருந்த மகள் உறவு உள்ள, 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

சிறுமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததை சாதகமாக பயன்படுத்தி கொண்டு, தொடர்ந்து அத்துமீறி வந்தார். இதுகுறித்து சிறுமியின் பாட்டிக்கு தெரிய வந்தது. புகாரின் பேரில், காங்கயம் அனைத்து மகளிர் போலீசார், 40 வயது நபரை 'போக்சோ' வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கில், குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி, திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட் நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தார். அரசு தரப்பில் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.






      Dinamalar
      Follow us