sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கட்டுப்பாட்டை இழந்த கார் :சிறுமி உட்பட 6 பேர் காயம்

/

கட்டுப்பாட்டை இழந்த கார் :சிறுமி உட்பட 6 பேர் காயம்

கட்டுப்பாட்டை இழந்த கார் :சிறுமி உட்பட 6 பேர் காயம்

கட்டுப்பாட்டை இழந்த கார் :சிறுமி உட்பட 6 பேர் காயம்


ADDED : மே 06, 2024 11:37 PM

Google News

ADDED : மே 06, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூரில், நிறைமாத கர்ப்பிணியை அரசுமருத்துவமனைக்கு அழைத்து வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதியது. இதில், சிறுமி உட்பட ஆறு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

பல்லடம், அறிவொளி நகரை சேர்ந்தவர் நாகேஸ்வரன், 28. ஐ.டி., பணியாளர். இவரது மனைவி சங்கீதா, 24. இவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

பிரசவத்துக்காக சென்னையில் இருந்து கணவர் நாகேஸ்வரன் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று சங்கீதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

உடனே, அவரை காரில் ஏற்றி கொண்டு, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு வந்தார். கார் மருத்துவமனை வளாகத்துக்குள் திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்து, இடதுபுறம் வளாகத்துக்குள் அமர்ந்திருந்த, பத்து வயது சிறுமி உட்பட, ஆறு பேர் மீது மோதியது.

அதில், அனைவரும் லேசான காயத்துடன் தப்பினர். தகவலறிந்து சென்ற திருப்பூர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us