sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பிரியாணியில் 'மண்'; கோபத்தில் கொலை?

/

பிரியாணியில் 'மண்'; கோபத்தில் கொலை?

பிரியாணியில் 'மண்'; கோபத்தில் கொலை?

பிரியாணியில் 'மண்'; கோபத்தில் கொலை?


ADDED : ஜூன் 20, 2024 05:01 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர், கோல்டன் நகர், கருணாகரபுரி நகர் முதல் வீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 30; பனியன் தொழிலாளி.

நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு அருகே பேக்கரிக்கு வெளியே நண்பர் சிலருடன் அமர்ந்திருந்தார்.

டூவீலரில் வந்த, ஐந்து பேர் கொண்ட கும்பல் வாலிபரை சரமாரியாக வெட்டி கொன்றனர். தடுக்க முயன்ற நண்பரையும் தாக்கி விட்டு தப்பி சென்றனர். திருப்பூர் வடக்கு போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.

முதல் கட்டமாக, அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமராவை பார்வையிட்டு விசாரித்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில், உசிலம்பட்டி உள்ளிட்ட சில இடங்களுக்கு தனிப்படை விரைந்தனர்.

போலீசார் கூறியதாவது:

பனியன் தொழிலாளி கொலை தொடர்பாக, பாலகிருஷ்ணன், 24, பாண்டியராஜன், 30, கவிஷேக், 24, சக்தி சண்முகம், 27 என, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள சிவா, 24 என்பவரை தேடி வருகிறோம்.

கொல்லப்பட்ட சதீஷ்குமார், பாலகிருஷ்ணன் உட்பட சிலர், நேற்று முன்தினம் மதியம், மது அருந்தி விட்டு, பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.

அப்போது, சதீஷ்குமார் திடீரென்று எழுந்து சென்றபோது, பாலகிருஷ்ணன் சாப்பிட்டு கொண்டிருந்த பிரியாணியில் மண் விழுந்தது.

இதுதொடர்பாக கேட்ட போது, சதீஷ்குமாருடன் வாக்குவாதம் ஏற்பட்டு, பின் அங்கிருந்து கலைந்து சென்றனர். இப்பிரச்னையை மையமாக வைத்து பாலகிருஷ்ணன் தனது நண்பர்களிடம் சொல்லி அழைத்து சென்று, சதீஷ்குமாரை வெட்டி கொலை செய்துள்ளனர்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us