sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மழை வேண்டிசிறப்பு தொழுகை

/

மழை வேண்டிசிறப்பு தொழுகை

மழை வேண்டிசிறப்பு தொழுகை

மழை வேண்டிசிறப்பு தொழுகை


ADDED : மே 06, 2024 12:10 AM

Google News

ADDED : மே 06, 2024 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மழை வேண்டி திருப்பூரில் உலமாக்கள் சபை சார்பில் நேற்று நான்கு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடந்தன. திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமாக்கள் சபை மற்றும் அனைத்து பள்ளிவாசல் சார்பில், இவை நடத்தப்பட்டன.

காங்கயம் ரோடு, அல் அமீன் பள்ளி வளாகத்தில் நடந்த தொழுகைக்கு பெரிய பள்ளி வாசல் தலைமை இமாம் முப்தி சல்மான் பாரிஸ் பாகவி தலைமை வகித்தார். மவுலவி அகமதுல்லா பாகவி பிரார்த்தனை நடத்தினார். அவிநாசி ரோடு, கபர்ஸ்தான் பள்ளி வாசலில் காதர்பேட்டை பள்ளி வாசல் தலைமை இமாம் அப்துல்லா பாகவி, மவுலவி நாஸிர் அகமத் சிராஜி கலந்து கொண்டனர். மங்கலம் பள்ளிவாசல் சார்பில் எம்.எஸ்.ஜெ.எம்., மகாலில் மில்லத்துல்லா பாகவி, முகமது சாலிக் பாகவி ஆகியோர் முன்னிலையில் தொழுகை நடந்தது.

பல்லடம், அறிவொளி நகர் பகுதி பள்ளி வாசலில், தமீம் அன்சாரி பைசி, மவுலவி அப்பாஸ் சிராஜி தலைமையில் தொழுகை நடந்தது. திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவுலவி முப்தி உமர்பாரூக் மழாஹிரி, செயலாளர் அபுதாகிர் நுாராணி, பொருளாளர் சபியுல்லா தாவூதி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us