ADDED : ஜூன் 15, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளுக்கு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று திருப்பூரில் நடக்கிறது. அங்கேரிபாளையம் ரோடு, முத்துக்கிருஷ்ணன் திருமண மண்டபத்தில், இன்று காலை 11:30 மணிக்கு இந்நிகழ்ச்சி நடக்கிறது. அமைச்சர் உதயநிதி இதில் கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கவுள்ளார்.
முன்னதாக, காலை 10:30 மணிக்கு மங்கலத்தில் கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நுாலகத் திறப்பு விழா, பிற்பகல் 1:30 மணிக்கு லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெறும் கட்சி நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் உதயநிதி பங்கேற்கவுள்ளார்.