sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழா கோலாகலம்

/

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழா கோலாகலம்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழா கோலாகலம்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழா கோலாகலம்


ADDED : மார் 06, 2025 06:22 AM

Google News

ADDED : மார் 06, 2025 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு, பக்தர்கள் பால்குடம் மற்றும் முளைப்பாலிகை எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.

திருப்பூர், கோவில்வழி, பிள்ளையார் நகரிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில், பொங்கல் திருவிழா கடந்த 25ம் தேதி, பூச்சாட்டுடன் துவங்கியது. இம்மாதம் 2ம் தேதி, பொட்டுசாமிக்கு பொங்கல் வைத்தல்; 3ம் தேதி, பால்குடம், தீர்த்த குடம் ஊர்வலம் மற்றும் அபிஷேகமும் அன்று இரவு, 8:00 மணிக்கு, மேள தாளங்களுடன் கோவில்வழி ஈஸ்வரன் கோவிலிலிருந்து, கம்பம், கும்பம் கோவிலுக்கு வந்து சேர்ந்தது.

நேற்றுமுன்தினம் மாலை நடந்த விழாவில், முத்தாரம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு, திரளான பக்தர்கள் கையில் பூவோடு, தலையில் முளைப்பாளிகை எடுத்துவந்தனர். பிள்ளையார் நகரின் அனைத்து வீதிகள் வழியாக வந்து, கோவிலை அடைந்தனர். தொடர்ந்து படைக்கலம் எடுத்துவரப்பட்டது நேற்று காலை, மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் விழா நடைபெற்றது. முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிறைவு நாளான இன்று, காலையில் மஞ்சள் நீராட்டு விழாவை தொடர்ந்து, அன்னதானம் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us