நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர் லோக்சபா தொகுதியில், ஓட்டுப்பதிவு முடிந்த பின், எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு பெட்டிகள் மற்றும் கன்ட்ரோல் யூனிட் ஆகியவற்றை, அலுவலர்கள் 'சீல்' வைத்தனர்.
இரவு, 7:00 மணி முதல், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியில் இருந்தும், போலீஸ் பாதுகாப்புடன், எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரிக்கு கொண்டு வரப்பட்டன. ஈரோடு மாவட்டத்துக்குட்பட்ட அந்தியூர், பவானிசாகர், பர்கூர் உள்ளிட்ட நெடுந்துாரங்களில் இருந்தும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்து வர வேண்டியிருந்தால், விடியற்காலை வரை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

