sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பசுந்தாள் உரம் சாகுபடி செய்ய மானிய விலையில் விதைகள்

/

பசுந்தாள் உரம் சாகுபடி செய்ய மானிய விலையில் விதைகள்

பசுந்தாள் உரம் சாகுபடி செய்ய மானிய விலையில் விதைகள்

பசுந்தாள் உரம் சாகுபடி செய்ய மானிய விலையில் விதைகள்


ADDED : மே 28, 2024 12:04 AM

Google News

ADDED : மே 28, 2024 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலை வட்டாரத்தில் நெல் சாகுபடி நிலங்களில், பசுந்தாள் உரம் சாகுபடி செய்ய வேளாண் துறை சார்பில் விதைகள் வழங்கப்படுகிறது.

உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:

உடுமலை வட்டாரம், கல்லாபுரம் நெல் சாகுபடி பகுதியில், மண்ணில் உயிர்ம கரிமச்சத்தினையும், பயிர் மகசூலையும் அதிகரிக்க, முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ், பசுந்தாள் உர விதை வினியோகம் செய்யப்படுகிறது.

பசுந்தாள் உர விதைகளை நெல் வயலில் விதைத்து, 40 முதல், 45 நாட்களில் நன்கு மடக்கி உழவு செய்வதால், மண் வளம் காக்கப்படுகிறது.

மண் அரிப்பு தடுக்கப்பட்டு, நீர் பிடிப்பு தன்மை அதிகரிக்கிறது. மண்ணில் கரிமச்சத்து அதிகரிப்பதோடு, பசுந்தாள் உரச்செடியின் வேர்கள் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள், சத்துக்களை வெளிவிடாமல், ஊக்குவிக்கியாக செயல்படும்.

பசுந்தாள் உர விதைகள், உடுமலை வட்டாரத்திற்கு, 75 ஏக்கர் பரப்பளவில் வினியோகிக்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தக்கைப்பூண்டு விதை, 50 சதவீதம் மானியத்தில், ஒரு ஏக்கருக்கு, 20 கிலோ வினியோகம் செய்யப்படுகிறது.

சிறு, குறு, ஆதிராவிடர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற, உழவர் செயலியில் பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு, தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us