/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வங்கி ஊழியரிடம் தாலிக்கொடி பறிப்பு
/
வங்கி ஊழியரிடம் தாலிக்கொடி பறிப்பு
ADDED : ஆக 01, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம் : வங்கி ஊழியரிடம் தாலிக்கொடியை பறித்து சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருமுருகன்பூண்டி நகராட்சி, ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்தவர் அனிருதன்; இவரது மனைவி காயத்ரி, 24; வங்கி ஊழியர். நேற்று காலை சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அம்மாபாளையம் தனியார் பள்ளி அருகே சென்றபோது, ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் காயத்ரி அணிந்திருந்த இரண்டு பவுன் தாலி செயினை பறித்து சென்றார். திருமுருகன்பூண்டி போலீசார்விசாரிக்கின்றனர்.