sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பணி நிரந்தரம் கேட்கும் 'டாஸ்மாக்' ஊழியர்கள்!

/

பணி நிரந்தரம் கேட்கும் 'டாஸ்மாக்' ஊழியர்கள்!

பணி நிரந்தரம் கேட்கும் 'டாஸ்மாக்' ஊழியர்கள்!

பணி நிரந்தரம் கேட்கும் 'டாஸ்மாக்' ஊழியர்கள்!


ADDED : ஜூன் 17, 2024 12:09 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;'டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பை, வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும்' என, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் தமிழக சட்டசபை கூட உள்ளது. பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரிவோர், தங்களின் பணி பலன் மற்றும் பண பலன் சார்ந்த கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில், சி.ஐ.டி.யு., டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில், அரசுக்கு சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

அதன்படி, 'டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, சட்டப்படி அவர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும்' என, சங்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, முதல்வருக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் நடத்துவது; ஒருமித்த கருத்துடைய சங்கங்களை இணைத்து, கோரிக்கையை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவது எனவும் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us