sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆசிரியர் தகுதி தேர்வு; 4 நாட்கள் நடக்கிறது

/

ஆசிரியர் தகுதி தேர்வு; 4 நாட்கள் நடக்கிறது

ஆசிரியர் தகுதி தேர்வு; 4 நாட்கள் நடக்கிறது

ஆசிரியர் தகுதி தேர்வு; 4 நாட்கள் நடக்கிறது


ADDED : மார் 07, 2025 03:30 AM

Google News

ADDED : மார் 07, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.,) நடத்தப்படும், தமிழ்நாடு மாநில தகுதித்தேர்வு இன்று துவங்கி வரும், 9ம் தேதி வரை, பல்லடம், திருச்சி ரோடு, கே.என்., புரம், அம்பாள் புரபஷனல் குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ் தேர்வு மையத்தில் நடக்கவுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி தேர்வர் உட்பட, 1,640 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். தேர்வை கண்காணிக்க முதன்மைக் கண்காணிப்பாளர், கணிணி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குனர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வெழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கென, சொல்வதை எழுதும் உதவி எழுத்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வுகளில் முறைகேடு செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண்காணிக்க கலெக்டர் மற்றும் கல்வி அலுவலர் தலைமையில் தனித்தனியே பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் எந்த நேரத்திலும் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தி, ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us