sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குறுமைய மாணவியர் வாலிபால் திறமை காட்டிய அசத்திய அணிகள் 

/

குறுமைய மாணவியர் வாலிபால் திறமை காட்டிய அசத்திய அணிகள் 

குறுமைய மாணவியர் வாலிபால் திறமை காட்டிய அசத்திய அணிகள் 

குறுமைய மாணவியர் வாலிபால் திறமை காட்டிய அசத்திய அணிகள் 


ADDED : செப் 02, 2024 11:36 PM

Google News

ADDED : செப் 02, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் வடக்கு குறுமைய மாணவியர் வாலிபால் போட்டி, சிறுபூலுவபட்டி, ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

பள்ளி செயலாளர் கீர்த்திகாவாணி, பள்ளி முதல்வர் மணிமலர் போட்டிகளை துவக்கி வைத்தனர். குறுமைய கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் ஜெரால்ட், இளங்கோவன் ஒருங்கிணைத்தனர். குறுமைய இணை செயலாளர்கள் உமா, ஜெயலட்சுமி, சவுமியா நடுவர்களாக போட்டிகளை நடத்தினர்.

இதில், 14 மற்றும் 17 வயது பிரிவில் தலா, 14, 19 வயது பிரிவில், எட்டு அணிகள் பங்கேற்றன. பதினான்கு வயது பிரிவு இறுதி போட்டியில், திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி - எம்.எஸ்., நகர், விகாஸ் வித்யாலயா ஜூனியர் அணியை, 2 - 0 என்ற செட் கணக்கில் வென்றது.

அடுத்து, 19 வயது பிரிவு இறுதி போட்டியில், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில், இன்பான்ட் ஜீசஸ் பள்ளி அணியை வென்றது. போதிய நேரமின்மை காரணமாக, 17 வயது பிரிவுக்காவன இறுதி போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

போட்டியில் விறுவிறுப்பு

பத்தொன்பது வயது பிரிவுக்கான முதல் போட்டியில், குறுமைய போட்டிகளை நடத்தும் ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளி - ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி இடையே நடந்தது. முதல் இரண்டு செட்டுகளில் ஒன்றை ஜெய்வாபாய், இன்னொன்றை ஜெய்சாரதாவும் கைப்பற்றின. மூன்றாவது செட்டில் ஜெய்வாபாய் பள்ளி மாணவியர், 16 - 14 என்ற புள்ளிகணக்கில், இறுதி சுற்றுக்குள் நுழைந்து, வெற்றியும் பெற்றனர்.

-----------------

திருப்பூர் வடக்கு குறுமைய பெண்கள் வாலிபால் போட்டியில், 19 வயது பிரிவில், ஜெய்வாபாய் மற்றும் ஜெய் சாரதா பள்ளி அணிகள் விளையாடியது.






      Dinamalar
      Follow us