/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடுத்தவர் காசில் வெளிநாட்டில் 'ஜாலி';மோசடி நபர் குறித்து விசாரணையில் அம்பலம்
/
அடுத்தவர் காசில் வெளிநாட்டில் 'ஜாலி';மோசடி நபர் குறித்து விசாரணையில் அம்பலம்
அடுத்தவர் காசில் வெளிநாட்டில் 'ஜாலி';மோசடி நபர் குறித்து விசாரணையில் அம்பலம்
அடுத்தவர் காசில் வெளிநாட்டில் 'ஜாலி';மோசடி நபர் குறித்து விசாரணையில் அம்பலம்
ADDED : ஜூன் 16, 2024 12:58 AM
திருப்பூர்:பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் தொடர்புடைய நபரை, கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தியதில், பல வெளிநாடுகளுக்கு சென்று பணத்தை செலவு செய்து ஜாலியாக இருந்தது தெரிய வந்துள்ளது.
காங்கயம், காடையூரை சேர்ந்தவர் தீபக் திலக், 45. இவர் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு நெட்வொர்க் மார்க்கெட்டிங் நிதி நிறுவனத்தை துவக்கி நடத்தினார். இதன் கிளைகளை திருப்பூர், ஈரோடு, சேலம் என, பல இடங்களில் துவங்கினார். அதில், 2 ஆயிரம் முதல் பல லட்சங்கள் வரை முதலீடு தொகை செய்தால், குறிப்பிட்ட மாதங்களுக்கு பின், முதலீடு தொகை இரட்டிப்பு செய்து வழங்கப்படும் என்று விளம்பரம் செய்தனர்.
இதனை நம்பி, தமிழகம் முழுவதும் பலரும் தங்களது பணத்தை முதலீடு செய்தனர். ஆனால், கூறியபடி பணத்தை கொடுக்கவில்லை. பல இடங்களில் மோசடி தொடர்பாக முதலீட்டாளர்கள் போலீசில் புகார் கொடுக்க ஆரம்பித்தனர். அதில், முதலீடு செய்ய வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
திருப்பூர் வழக்கில் கைது
கடந்த, 30 ம் தேதி திருப்பூர் மோசடி வழக்கு ஒன்றில் தீபக் திலக்கை திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த கோவையில் உள்ள 'டான்பிட்' கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அவரை, மூன்று நாள் கஸ்டடி எடுத்து விசாரித்த போலீசார், இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையிலான போலீசார் இரு நாட்களில் விசாரணையை முடித்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மோசடி தொடர்பாக பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு தெரிய வந்தது.
வெளிநாட்டில் சுற்றுலா
போலீசார் கூறியதாவது: மோசடியில் ஈடுபட்ட தீபக் திலக், கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலமாக மக்களை நம்ப வைத்தார். பலரும் நம்பி பணம் செலுத்தினர்.
ஒரு கட்டத்துக்கு மேல் ஒவ்வொரு பகுதிகளாக கிளைகளை திறந்து அதிக முதலீடுகளை பெற்றார். பின், அவர்களுக்கு பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தியது தெரிந்தது.
மோசடியாக வந்த பணம் மூலம் விலை உயர்ந்த டிவிக்களை ஏராளமானவற்றை வாங்கி குவித்துள்ளார். ஈரோடு போன்ற இடங்களில் இடங்களை விலைக்கு வாங்கினார்.
அதுமட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் வலம் வந்து ஜாலியாக பொழுதை கழித்தார். மோசடி நபரின் வங்கி கணக்கு உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.