sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

10 நாளாக நிரம்பி வழியும் ஆண்டிபாளையம் குளம்

/

10 நாளாக நிரம்பி வழியும் ஆண்டிபாளையம் குளம்

10 நாளாக நிரம்பி வழியும் ஆண்டிபாளையம் குளம்

10 நாளாக நிரம்பி வழியும் ஆண்டிபாளையம் குளம்


ADDED : ஆக 11, 2024 11:03 PM

Google News

ADDED : ஆக 11, 2024 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர், ஆண்டிபாளையம் குளம் நிரம்பி வழிந்து, தொடர்ந்து பத்தாவது நாளாக, உபரிநீர் வெளியேறிச்செல்கிறது.

கோவையில் துவங்கி, கரூர் வரை செல்லும் நொய்யல் ஆற்றின் குறுக்கே, 32 இடங்களில் தடுப்பணைகள் உள்ளன; அவற்றின் மூலம் ஏராளமான குளம், குட்டைகளும் தண்ணீர் வசதி பெறுகின்றன.

திருப்பூர் மாவட்ட எல்லையில் முதலில் அமைந்துள்ளது, சாமளாபுரம் குளம். அந்தக் குளம் நிரம்பி வழிந்தால், உபரிநீர் பள்ளபாளையம் குளத்துக்கு செல்கிறது. அடுத்ததாக செம்மாண்டம்பாளையம் குளம், ஆண்டிபாளையம் குளம், மூளிக்குளம், மாணிக்காபுரம் குளம், அணைப்பாளையம் குளம், கத்தாங்கண்ணி என, குளங்கள் வரிசையாக உள்ளன.

ஆண்டிபாளையம் குளத்துக்கு, மங்கலம் நல்லம்மன் தடுப்பணை மற்றும் ஒட்டணையில் இருந்து, நொய்யல் தண்ணீர் கிடைக்கிறது. ஆண்டிபாளையம் குளத்துக்கு, இரண்டு வாய்க்காலில் தண்ணீர் வருவதால், வேகமாக நிரம்பியது. கடந்த, ஆடிப்பெருக்கு நாளில் குளம் நிரம்பியது.

அன்று அதிகாலை, 3:00 மணி முதல் தொடர்ந்து 10வது நாளாக இன்றும் குளம், உபரிநீர் தொடர்ந்து வெளியேறுகிறது. குளத்தில் இருந்து வரும் மீன்களை பார்த்து, சிறுவர்கள் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருக்கின்றனர். குளத்தில், நீண்ட நாட்களாக தேங்கியிருந்த தண்ணீர் வெளியேறி, நொய்யலில் வரும் மழைநீரை தேக்கி வைக்க வேண்டும்.

அதற்காகவே, தண்ணீர் வரத்து இருக்கும் அளவுக்கு, குளம் நிரம்பி உபரிநீர் வெளியேறி கொண்டிருக்கிறது. அடுத்தமுறை நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், ஆண்டிபாளையம் குளத்தில் புது வெள்ளம் தேக்கி வைக்கப்படுமென, விவசாயிகள் தெரிவித்தனர்.

-----

5 அல்லது 6 காலம்

ஆண்டிபாளையம் குளம் நிரம்பி, பத்தாவது நாளாக, உபரிநீர் வெளியேறிச்செல்கிறது.

குளம் முழுமையாக நிரம்பி, கண்ணுக்குக் குளுமையாகக் காட்சி தருகிறது.






      Dinamalar
      Follow us