sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரோட்டில் வெள்ளமாக பாயும் மழை நீர் வடிகால் சீரமைக்காததால் சிக்கல்

/

ரோட்டில் வெள்ளமாக பாயும் மழை நீர் வடிகால் சீரமைக்காததால் சிக்கல்

ரோட்டில் வெள்ளமாக பாயும் மழை நீர் வடிகால் சீரமைக்காததால் சிக்கல்

ரோட்டில் வெள்ளமாக பாயும் மழை நீர் வடிகால் சீரமைக்காததால் சிக்கல்


ADDED : மே 23, 2024 02:03 AM

Google News

ADDED : மே 23, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: மாநில நெடுஞ்சாலை மற்றும் இதர ரோடுகளில், வடிகால்களை முறையாக பராமரிக்காததால், மழைக்காலங்களில், ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து, போக்குவரத்து பாதிப்பது தொடர்கதையாக உள்ளது.

உடுமலை, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டங்களின் கீழ், தாராபுரம், பல்லடம் மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய, இதர ரோடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பருவமழைக்கு முன், ரோட்டோரத்தில் உள்ள வடிகால்களை சீரமைப்பது நெடுஞ்சாலைத்துறையின் முக்கிய பணியாகும்.

வடிகாலில் உள்ள புதர்களை அகற்றி, ரோட்டுக்கு மழை நீர் வராமல் வெளியேற தேவையான பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இந்தாண்டு இப்பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கண்டுகொள்ளாததால், கோடை மழை காலத்தில், பெரும்பாலான ரோடுகளில், போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை உருவானது.

உதாரணமாக, உடுமலை - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, செஞ்சேரிமலை, திருமூர்த்திமலை, ஆனைமலை ரோடு உள்ளிட்ட ரோடுகளில், பல இடங்களில், தண்ணீர் தேங்கி நின்று, இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக செல்ல முடியவில்லை.

தரை மட்ட பாலங்கள் அமைந்துள்ள பகுதிகளில், பிளாஸ்டிக் உட்பட கழிவுகள், குழாய்களில் அடைத்துக்கொள்வதால், பாலத்தின் மீது தண்ணீர் செல்கிறது. இதனால், பாலத்தை அச்சத்துடன் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் கடக்க வேண்டியுள்ளது.

மழை இடைவெளி விட்டும், சில ரோடுகளில், தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதே நிலை நீடித்தால், பெரும்பாலான ரோடுகளில் மழை நீர் தேங்கி, ஓடுதளம் சேதமடையும்.

தற்போது பருவமழை துவங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நகரிலுள்ள ரோடுகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டு அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.

இதனை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்க வேண்டும் என, நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

முக்கிய ரோடுகள் தடுப்பணையாக மாறும் முன், நெடுஞ்சாலைத்துறையினர் வடிகால்களை சீரமைத்து, மழை நீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் இப்பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.






      Dinamalar
      Follow us