/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜெயந்தி பப்ளிக் பள்ளி மாணவர்கள் அபாரம்
/
ஜெயந்தி பப்ளிக் பள்ளி மாணவர்கள் அபாரம்
ADDED : ஜூலை 29, 2024 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான, ஒன்பதாவது, சகோதயா ஸ்கேட்டிங் போட்டி திருப்பூரில் நடந்தது. இதில், ஜெயந்தி பப்ளிக் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி தீபஜோதி, 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இரண்டு தங்கம் வென்றார். பிளஸ் 1 மாணவர் ரித்விக், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், வெள்ளி 0வென்றார்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் கிருஷ்ணன், பள்ளியின் முதல்வர் மலர்விழி, எச்.டி.எப்.சி., வங்கி மேலாளர் செல்வக்குமார், பள்ளியின் ஆலோசகர் சிலம்புசெல்வன் உள்ளிட்டோர் பாராட்டினர். உடற்கல்வி ஆசிரியர்கள் வினோத், கவுரி மற்றும் பலர் உடனிருந்தனர்.