sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோவில் சொத்து கோவிலுக்கே... அதிரடி காட்டிய இணை கமிஷனர்

/

கோவில் சொத்து கோவிலுக்கே... அதிரடி காட்டிய இணை கமிஷனர்

கோவில் சொத்து கோவிலுக்கே... அதிரடி காட்டிய இணை கமிஷனர்

கோவில் சொத்து கோவிலுக்கே... அதிரடி காட்டிய இணை கமிஷனர்


ADDED : ஜூலை 30, 2024 10:59 PM

Google News

ADDED : ஜூலை 30, 2024 10:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்:கடைகளை காலி செய்ய மறுத்தவர்களிடம், 'கோவில் சொத்து கோவிலுக்கு தான்' என இணை கமிஷனர் அதிரடி காட்டி, கடைகளை அறநிலையத்துறை வசம் ஒப்படைக்க செய்தார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கடைவீதியில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. அறநிலையத் துறை கோவிலான இதில், திருப்பணி நடந்து வருகிறது. அதற்காக, கோவிலுக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்தும் பணியிலும் அறநிலை துறையினர் ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில், கோவிலுக்கு முன் உள்ள கடைகள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. கடை உரிமையாளர்கள் காலி செய்யாத நிலையில், நேற்று காலை, அறநிலையத்துறை இணை கமிஷனர் ஹர்ஷினி தலைமையிலான அதிகாரிகள் கடைகளுக்கு பூட்டு போட தயாராகினர்.

செலுத்த வேண்டிய வாடகை தொகையை குறைக்குமாறு கடை உரிமையாளர்கள் வேண்டுகோள் வைத்து தொடர்ந்து, 7 லட்சம் ரூபாய் முதல் கட்டமாக செலுத்த அனுமதிக்கப்பட்டது. அடுத்து நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து, கடைகளை அறநிலையத்துறை வசம் ஒப்படைப்பதாக அனைவரும் எழுதி கையொப்பமிட்டு கொடுத்தனர்.

முன்னதாக, கடை உரிமையாளர்கள் மத்தியில், இணை கமிஷனர் ஹர்ஷினி கூறியதாவது:

இத்தனை ஆண்டுகளாக வாடகையே இல்லாமல் கோவில் நிலத்தில் கடைகளை அமைத்து அனுபவித்து வந்துள்ளீர்கள். கடந்த, 2005ல், கலெக்டர் உத்தரவிட்டும், 2023ல் கோர்ட் தீர்ப்பு வழங்கியும், ஒரு வாரத்துக்கு முன் நோட்டீஸ் வழங்கியும் கடைகளை காலி செய்யாமல் உள்ளீர்கள்.

இதனால், அரசுக்கு நிதி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில், ஒவ்வொருவரும் தலா, 10 லட்சம் ரூபாய் கோவில் திருப்பணிக்கு வழங்க வேண்டும். கோவில் சொத்து கோவிலுக்கு தான். இனி, பொது ஏலத்தின் அடிப்படையில் தான் கடைகள் வாடகைக்கு விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us