sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'கோமாரி நோய்க்கு சாதக வானிலை; கால்நடைகளைக் கவனியுங்கள்'

/

'கோமாரி நோய்க்கு சாதக வானிலை; கால்நடைகளைக் கவனியுங்கள்'

'கோமாரி நோய்க்கு சாதக வானிலை; கால்நடைகளைக் கவனியுங்கள்'

'கோமாரி நோய்க்கு சாதக வானிலை; கால்நடைகளைக் கவனியுங்கள்'


ADDED : ஆக 08, 2024 12:12 AM

Google News

ADDED : ஆக 08, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : 'காலநிலை மாற்றம், கால்நடைகளை பாதிக்க கூடும்' என, வேளாண் பல்கலை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலை, இந்திய வானிலைத் துறையின் கோவை, வேளாண் ஆராய்ச்சி மையம் இணைந்து, திருப்பூருக்கான வாராந்திர வானிலை அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. நேற்று துவங்கி வரும், 11ம் தேதி வரை, திருப்பூரில், பகல் நேர வெப்பநிலை அதிகபட்சம், 34 முதல், 35 டிகிரி செல்சியஸ்; குறைந்தபட்ச வெப்பநிலை, 21 முதல், 22 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

காலை நேர காற்றின் ஈரப்பதம், 70 சதவீதம்; மாலை நேர காற்றின் ஈரப்பதம், 40 சதவீதமாகவும் இருக்கும். சராசரியாக, மணிக்கு, 16 முதல், 22 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும்; பெரும்பாலும் தென் மேற்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும்.

தற்போது நிலவும் வானிலையில் கால்நடைகள் அதிகளவு தண்ணீர் பருகும் வாய்ப்புண்டு. எனவே, போதியளவு சுத்தமான குடிநீரை கால்நடைகளுக்கு வழங்க வேண்டும். தற்போது நிலவும் வானிலை, கோமாரி நோய்க்கு சாதகமானதாக இருப்பதால், கறவை மாடு மற்றும் உழவு மாடுகளின் வாய் மற்றும் கால் குளம்புகளை பரிசோதனை செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us