/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆசிரியரின் அரும்பணி; 'உயிர் பெற்றது' பள்ளி
/
ஆசிரியரின் அரும்பணி; 'உயிர் பெற்றது' பள்ளி
ADDED : ஆக 08, 2024 12:38 AM

உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம், ஆண்டியகவுண்டனுார் ஊராட்சிக்குட்பட்டது ஜக்கம்பாளையம் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றியதுவக்கப்பள்ளியில், 2 மாணவர்கள் மட்டுமே நடப்பு கல்வியாண்டில் இருந்தனர்.மூடுவிழாவை எதிர்நோக்கிய பள்ளியாக இருந்தது.
இந்நிலையில், தற்போது நடந்த ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வில், புதிதாக ஆசிரியர் ஆனந்தகிருஷ்ணன், உதவி ஆசிரியராக இப்பள்ளிக்கு மாறுதல் பெற்று வந்தார். பள்ளி செல்லும் வயதிலுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வெளிமாநில குழந்தைகள் உள்பட 16 பேர் பள்ளியில் சேர்ந்தனர்.
ஆசிரியர் ஆனந்தகிருஷ்ணன் கூறுகையில், ''பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து மாணவர்களுக்கும், சேர்க்கை பதிவு செய்யப்பட்டு விட்டது. விரைவில் நலத்திட்ட பொருட்கள் வந்து சேர்ந்துவிடும். மாணவர்களை ஊக்கப்படுத்தி, இடைநிற்றல் இல்லாத அடிப்படை கல்வி வழங்க வேண்டும் என்பது தான் எனது குறிக்கோள்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.