sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தீரன் சின்னமலை சொந்த ஊரில் தமிழக அரசு சார்பில் மலர் மரியாதை

/

தீரன் சின்னமலை சொந்த ஊரில் தமிழக அரசு சார்பில் மலர் மரியாதை

தீரன் சின்னமலை சொந்த ஊரில் தமிழக அரசு சார்பில் மலர் மரியாதை

தீரன் சின்னமலை சொந்த ஊரில் தமிழக அரசு சார்பில் மலர் மரியாதை


ADDED : ஆக 03, 2024 08:15 PM

Google News

ADDED : ஆக 03, 2024 08:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, தமிழக அரசு சார்பில், அவரது சொந்த ஊரான மேலப்பாளையத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரர், தீரன் சின்னமலையின், 219 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தீரன் சின்னமலையின் சொந்த ஊரான, திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, மேலப்பாளையத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு தரப்பில் மரியாதை செலுத்தப்படுகிறது.

மேலப்பாளையம் சமுதாயக்கூடத்தில், தீரன் சின்னமலையின் படம் அலங்கரிக்கப்பட்டு, நேற்று மலர் மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில், கலெக்டர் கிறிஸ்துராஜ், தீரன் சின்னமலை படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தாராபுரம் ஆர்.டி.ஓ., செந்தில்அரசன், காங்கயம் ஒன்றிய குழு தலைவர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொழில் அமைப்புகள், பொதுநல அமைப்பினர், மேலப்பாளையம் சென்று மலரஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us