sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'குடிநீரை காய்ச்சி குடித்தால் 'டெங்கு' அச்சமில்லை'

/

'குடிநீரை காய்ச்சி குடித்தால் 'டெங்கு' அச்சமில்லை'

'குடிநீரை காய்ச்சி குடித்தால் 'டெங்கு' அச்சமில்லை'

'குடிநீரை காய்ச்சி குடித்தால் 'டெங்கு' அச்சமில்லை'


ADDED : மே 17, 2024 12:48 AM

Google News

ADDED : மே 17, 2024 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;டெங்கு பாதிப்பு, பரவ வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலில் திருப்பூர் மாவட்டம், பொது சுகாதாரத்துறையால் சேர்க்கப்பட்டுள்ளது. காரணம், இங்குள்ள சுகாதார சூழல். இம்மாதத்தில் இதுவரை, 11 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகி, குணமடைந்து விட்டனர்.

தற்போதைக்கு ஒரு முதியவர் மட்டும், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டெங்கு பாதித்து, சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் முரளி கூறுகையில்,'மாவட்டத்தில் இன்னமும் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கவில்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் துவங்கப்பட்டுள்ளது; தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வீடுகளின் அருகில் டயர், ஆட்டு உரல், பிளாஸ்டிக் டிரம் உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்கி, லார்வா, கொசு உற்பத்தி ஆகாத வகையில் துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். குடிநீரை காய்ச்சி பருக வேண்டும்.

தங்களது சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொண்டாலே டெங்கு காய்ச்சல் அச்சம் இல்லாமல் இருக்கலாம். காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், உடனே சிகிச்சை பெற வேண்டும்,' என்றார்.






      Dinamalar
      Follow us