/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உந்தன் கருணைக்கு எல்லையில்லை தாயே... அவிநாசியில் அம்மன் தேரோட்டம் கோலாகலம்
/
உந்தன் கருணைக்கு எல்லையில்லை தாயே... அவிநாசியில் அம்மன் தேரோட்டம் கோலாகலம்
உந்தன் கருணைக்கு எல்லையில்லை தாயே... அவிநாசியில் அம்மன் தேரோட்டம் கோலாகலம்
உந்தன் கருணைக்கு எல்லையில்லை தாயே... அவிநாசியில் அம்மன் தேரோட்டம் கோலாகலம்
ADDED : ஏப் 23, 2024 10:35 PM

அவிநாசி : அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரைத் தேர்த்திருவிழாவில் ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் தேர் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், 14ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை தேர்த்திருவிழா துவங்கியது. 21 மற்றும் 22ம் தேதியில், அவிநாசியப்பர் தேரோட்டம் நடைபெற்றது. நேற்று காலை 10:17 மணிக்கு, ஸ்ரீகருணாம்பிகை அம்மன் தேரோட்டம் நடைபெற்றது.
பெண்கள், சிறுவர், சிறுமியர் என, ஆயிரக்கணக்கானோர் தேர் வடத்தை பிடித்து, மதியம், 1:40 மணிக்கு நிலை சேர்த்தனர். அம்மன் தேரோட்டத்தை முன்னிட்டு, பல மண்டபங்களில் மற்றும் பல அமைப்பு சார்பிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அம்மன் தேரை தொடர்ந்து, வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமண்யர் மற்றும் ஸ்ரீசண்டிகேஸ்வரர் தேரை குழந்தைகள் உற்சாகத்துடன் இழுத்தனர். தொடர்ச்சியாக, பூமி நீளா தேவி சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் தேரும் ரத வீதிகளில் பவனி வந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு, டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜவேலு, எஸ்.ஐ.,க்கள் என, 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

