/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிழற்கூரை இல்லை; பயணியர் தவிப்பு
/
நிழற்கூரை இல்லை; பயணியர் தவிப்பு
ADDED : ஏப் 10, 2024 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலையில் முக்கிய பஸ் நிறுத்தத்தில் நிழற்கூரை இல்லாததால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
உடுமலை தளி ரோடு வழியாக, திருமூர்த்திமலை, அமராவதி அணை, சின்னார் போன்ற இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த ரோட்டில் யூனியன் ஆபீஸ் பஸ் நிறுத்தம் உள்ளது.
இங்கு நிழற்கூரை இல்லாததால், பயணியர், மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டியதுள்ளது. எனவே, நகராட்சி அதிகாரிகள் புதிதாக நிழற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

