sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கத்திக்குத்து சம்பவம் மூவருக்கு சிறை

/

கத்திக்குத்து சம்பவம் மூவருக்கு சிறை

கத்திக்குத்து சம்பவம் மூவருக்கு சிறை

கத்திக்குத்து சம்பவம் மூவருக்கு சிறை


ADDED : ஜூன் 25, 2024 12:47 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர், மண்ணரை பகுதியில், வாடகை வீட்டில் வசிப்பவர் குமரேசன், 40. பனியன் கம்பெனி தொழிலாளி. அருகேயுள்ள மற்றொரு வீட்டில் மூன்று பேர் தங்கியிருந்தனர். இவர்கள் அடிக்கடி அந்த காம்பவுண்ட்டுக்குள் தகராறு செய்வது வழக்கமாக இருந்துள்ளது.

கடந்த 2020 டிச., 25ம் தேதி இரவு அவர்கள் குமரேசனுடன் தகராறு செய்தனர். தகராறு முற்றிய நிலையில், அவர்கள் கத்தியால் குமரேசனை வெட்டிக் காயப்படுத்தினர். வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, மூன்று பேரையும் கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு திருப்பூர் முதன்மை சப் கோர்ட்டில், நீதிபதி ராமச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு வக்கீல் பஷீர் அகமது ஆஜரானார்.

இந்த வழக்கில், பனியன் நிறுவன ஊழியர் துர்வாசன், 47 என்பவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை, பைனான்ஸ் நிறுவன ஊழியர் சபரி கிருஷ்ணன், 27 மற்றும் கோகுல்நாத், 29 ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us