sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூர் போலீஸ் கமிஷனர் விரைவில் பொறுப்பேற்பு

/

திருப்பூர் போலீஸ் கமிஷனர் விரைவில் பொறுப்பேற்பு

திருப்பூர் போலீஸ் கமிஷனர் விரைவில் பொறுப்பேற்பு

திருப்பூர் போலீஸ் கமிஷனர் விரைவில் பொறுப்பேற்பு


ADDED : ஜூலை 09, 2024 09:30 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 09:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு சேலத்துக்கு மாற்றப்பட்டு, சென்னையில் பணிபுரிந்த ஐ.ஜி., லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு, சேலம் மாநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, சென்னை ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி.,யாக உள்ள லட்சுமி, திருப்பூர் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். விரைவில், திருப்பூரில் பொறுப்பேற்க உள்ளார்.

திருப்பூரில் பொறுப்பேற்க உள்ள புதிய கமிஷனர் லட்சுமி, 1997ம் ஆண்டு குரூப் - 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி.,யாக தனது பணியை துவக்கினார். அதன்பின், ஐ.பி.எஸ்., அதிகாரியாக பதவி உயர்வு பெற்று, சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனர், தி.நகர்., மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், கோவையில் துணை கமிஷனராக பணிபுரிந்தவர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறையில் சிறப்பாக செயல்பட்டார். நேர்மையான, துணிச்சல் மிக்க பெண் ஐ.பி.எஸ்., ஆன லட்சுமி பல்வேறு அதிரடிகளுக்கு பெயர் போனவர் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us