/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறனாய்வு தேர்வு நாளை கடைசி நாள்
/
திறனாய்வு தேர்வு நாளை கடைசி நாள்
ADDED : ஜூன் 25, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;மேல்நிலை கல்விக்கு செல்லும் அரசு பள்ளி மாணவ, மாணவியரின் திறனை கண்டறிய, அவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், முதல்வர் திறனாய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது.
நடப்பாண்டு தேர்வு, ஜூலை, 21ல் நடக்கிறது. மாநில பாடத்திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்று, தற்போது, 2024 - 2025ம் கல்வியாண்டில், பிளஸ் 1 அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம், நாளையுடன் முடிகிறது.