ADDED : ஜூன் 24, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
திருப்பூர், ஜூன் 25–
திருப்பூர் மாநகராட்சி 44வது வார்டில், தனியார் நிலத்தில் வளர்ந்துள்ள ஆலமரம் மின்கம்பங்கள் மற்றும் அருகிலுள்ள கட்டடங்களுக்கு இடையூறாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பழைய குமார் லாரி ஆபீஸ் சந்து மற்றும் மரக்கடை சந்து பகுதியில் உள்ள மரக்கிளைகள் மின்கம்பங்களை சூழ்ந்துள்ளதால், மின் பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மின் வாரியம் கிளைகள் அகற்றப்பட வேண்டும்.
–––
2 படங்கள்
மரக்கிளைகள் சூழ்ந்த மின்கம்பம்
